Saturday, March 13, 2010

கனவே நனவே

கனவுகள் கரும்பு
கடித்துன்ன விரும்பு
மனதுக்குள் மொட்டாய்
முகிழ்ந்த திட்டங்கள்
மலர்ந்து மணக்கும்
தொடர்ந்து இனிக்கும்
குளிர்ந்திடும் சிந்தை
விந்தையிலும் விந்தை

எதிர்பாராத விதத்திலே
எண்ணியிராத கணத்திலே
யாரோ எங்கிருந்தோ
வந்து நின்று நடத்திட
விதைகள் விருட்சமாகி
விரும்பியது நிறைவேறி
வாழ்வெனும் வானிலே
விரியும் விதங்கள்
வியப்பின் விளிம்பிலே
நிறுத்தும் அற்புதங்கள்
நிச்சயமான நிகழ்வுகள்
நிற்காத அதிசயங்கள்

நூறாயிரம் ஆசைகள்
நனவாகும் ஒவ்வொன்றாய்
நல்லதே நடக்கும்
நாளையும் தொடரும்
களிப்புகள் அனந்தம்
கணிப்புகள் துல்லியம்
கைக்குள் உலகம்
கனவுகள் காண்பவர்க்கே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community