Sunday, March 14, 2010

மெளனம்

என்னவென சொல்லுவது
எதுகை மோனையுடனா
எடுதியம்ப இயலுமோ
எண்ணம்தான் புரியுமோ
அரைவட்டமான நிலவு
அருகினிலே துணைவி
அடங்கிவிட்ட காற்று
அசைவில்லா இலைகள்
அமைதியான சூழல்
அகமிரண்டு களித்து
அளவளாவும் மெளனம்
அலையலையாய் நினைவு
அழகழகாய் கனவு
அந்தரங்க பரிமாற்றம்
அர்த்தங்கள் அனந்தம்
அற்புதமாய் அரங்கேறும்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community