Monday, March 15, 2010

இயற்கையன்னை

மானுடம் ஆடுது ஊஞ்சலிலே
இயற்கையன்னை மடியிலே
தவழும் குழந்தை அறியாது
அவளது உள்ளக்கிடக்கை
தாலாட்டித் தூங்க வைக்க
தயை அவள் கொள்வாளோ
பழுத்த இலை மரத்திலே
தொடுத்துக்கொண்டிருக்க
சிறு காற்றும் வருவதில்லை
அதை கீழே விழ வைத்திட
துளிர்த்த பச்சை இலைகள்
கொத்தாய் பறிக்கப்பட்டு
வீசிக் கிடக்குமே அந்தோ
ஒரு சூறாவளிக் காற்றாலே
கருணையிதுவோ அறியேன்
கர்மந்தானோ வேறெதுவுமோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community