மானுடம் ஆடுது ஊஞ்சலிலே
இயற்கையன்னை மடியிலே
தவழும் குழந்தை அறியாது
அவளது உள்ளக்கிடக்கை
தாலாட்டித் தூங்க வைக்க
தயை அவள் கொள்வாளோ
பழுத்த இலை மரத்திலே
தொடுத்துக்கொண்டிருக்க
சிறு காற்றும் வருவதில்லை
அதை கீழே விழ வைத்திட
துளிர்த்த பச்சை இலைகள்
கொத்தாய் பறிக்கப்பட்டு
வீசிக் கிடக்குமே அந்தோ
ஒரு சூறாவளிக் காற்றாலே
கருணையிதுவோ அறியேன்
கர்மந்தானோ வேறெதுவுமோ
Monday, March 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment