காற்றும் மழையும்
வெயிலும் குளிரும்
பருவ நியதிகள்
பாலைகள் சோலைகள்
மலைகள் மடுக்கள்
இயற்கையின் இயல்புகள்
ஓரிடம் துரத்தும்
வேறிடம் இழுக்கும்
காந்தத்தின் இருதுருவங்கள்
இரும்பின் ஈர்ப்புகள்
ஒட்டிக் கிடக்கவோ
ஓடி ஒளியவோ
உன்னால் முடியுமோ
அவரவர் சிலுவையை
அவரவர்தானே
சுமக்க வேண்டும்
வேறொரு தோளுக்கு
மாற்ற முடியுமோ
தாயும் சேயும் னாலும்
வாயும் வயிறும் வேறல்லவோ
அவரவர் வலியை
அவரவர்தானே
உணர முடியும்
செருப்பின் கடியை
அணிந்தவனே அறிவான்
தீர்க்கவேண்டிய
கடன்கள் எத்தனை
எத்திசை அழைக்கிறது
எவ்விடம் இனிக்கிறது
எதுவோ தடுக்கிறது
முளையில் கட்டிய பசுவல்ல
தறியில் பாவும் நூலல்ல
தேடும் இலக்கெது
திகட்டாத நிலையெது
தானாய் துன்பம் வரும்
இன்பமும் அப்படியே
தானாய் இரண்டும் கரையும்
கடலில் அலைகள்
ஓய்வதேயில்லை
ஓடமாய் மிதந்திடு
ஓய்வுக்கு காத்திரு
விதைகள் தானே முளைக்கும்
மரங்கள் தானே பிழைக்கும்
மண்ணாய் மழையாய்
உன்னை உணர்வாய்
வளரும் காட்சியை
வேடிக்கை பார்த்திரு
எட்டியே இருந்திடு
மரித்த உயிர்கள்
மறைவதில்லை
மின்னும் கோடி
விண்மீன்களாய்
உலகை உறவை
நோக்கும் கண்கள்
அமிழ்தான கணங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment