Friday, March 12, 2010

தொல்லை

அழைக்கிறாயோ செல்லமே
ஏன் என்னை அழைக்கிறாயோ
அடிக்கடி சிணுங்கினால்
அப்படியே நான் ஓடி வர
அலுக்காதோ எனக்குமே
கையிலே கிடக்கணுமா
அணைப்பிலே ஓர் இதமா
கொஞ்சித்தான் கூப்பிட்டாதே
கண்ணயர கைவேலை முடிக்க
கொஞ்சம் தயை செய்திடு
தொல்லை தரும் இன்பமே
தொலைபேசியெனும் சாதனமே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community