Saturday, March 13, 2010

நாடகம்

கூறியது வாய் கோபமாய்
சிரித்தது கண் கள்ளமாய்
புரியுது கபட நாடகம்
எவ்வழி சென்றாலும் பழி
கன்னியின் விளையாட்டு
காளையின் இக்கட்டு
நிற்கவோ நகரவோ
மண்டியிட்டு கெஞ்சவோ
வீராப்பாய் விஞ்சவோ
வஞ்சி இன்பவல்லியே
இறுதியில் வெல்வாளே
இதற்கேன் இழுபறி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community