Sunday, March 14, 2010

வாழ்ந்திடு

ஓய்வெடுக்க எண்ணுமோ
கடலை தேடும் ஆறுகள்
கரையை தழுவும் அலைகள்
சுழலும் பூமியும் நிலவும்

ஓய்வெடுக்க முடியுமோ
பிரம்மாவும் காலனும்
நின்று போகுமோ
பிறப்பும் இறப்பும்

ஓய்வெடுக்க நிரந்தரமாய்
உறங்கச்செல்லும் நாள்
வராமலா போய்விடும்
அதுவரை வாழ்ந்திடு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community