Sunday, March 7, 2010

விழி

விழிக்குள் நுழைந்தவளே
விபத்தாகிப் போனவளே
விழுந்த கணம் முதலாய்
அவதிதான் படுகிறேன்
கண்ணே உள்ளே வந்தாய்
கலகம் துவக்கினாய்
உறுத்தத் துவங்கினாய்
ஒளிந்து விளையாடுகிறாய்


தேய்த்துப் பார்க்கிறேன்
நீ அழியவில்லை
துடைத்துப் பார்க்கிரேன்
நீ போகவில்லை
கழுவிப் பார்க்கிறேன்
களைய முடியவில்லை
கலங்கிப் போயின கண்கள்
சிவந்து போயின கண்கள்
எரிச்சலடைந்தன கண்கள்
கண்ணீர் விடும் கண்கள்

கண்ணுக்குள் நீ வந்தே
துன்பம் இத்தனை தந்தே
வருத்தும் சிறு காதலியே
பொறுக்க முடியலையே
எப்படி நான் துயிலுவேன்
உள்ளிருந்து உறுத்துகிறாய்
விட்டகல மறுக்கிறாய்
விட்டத்தை வெறிக்கவோ
கொட்டாவி விட்டபடியே
விடியும் வரை விழித்திருக்க
தண்டனை தந்தவளே
உன்னை நான் வெல்லுவேன்
உறங்கித்தான் பார்ப்பேன்
காலையில் கண்விழிக்கையில்
காணாமல் போவாயே
கண்ணுக்குள் விழுந்த தூசியே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community