Monday, October 12, 2015

இன்ப நாடகம்

IndiBlogger - The Indian Blogger Community நிறைந்து நின்றது நிலவு வட்டம்
மறைந்து விட்டது மனவாட்டம்
இனம்புரியாத புது இந்திரலோகம்
இலைகளூடே காற்றும் ஒளியும்
ஓடி ஒளிந்து ஆடுகின்ற சரசம்
மூடி விலகக்காண்பது பரவசம்
தென்னங்கீற்றுகள் சாமரம் வீச
சின்ன மலர்கள் தம்மடலவிழ்க்க
அரங்கேறும் ஓர் இன்ப நாடகம்
இரவென்னும் இனிய மேடையில்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community