Monday, October 12, 2015

ஆண்மகனே!

IndiBlogger - The Indian Blogger Community கடல் ஆழந்தான் 
மீனுக்கல்ல 
பெண்ணும் கடலே 
மீனாய் மாறு 

வானம் உயரந்தான் 
பறவைக்கல்ல 
விரிந்தவள் அவளே 
சிறகை விரித்திடு 

கல் கடினந்தான் 
உளிக்கல்ல 
சிலையாய் அவளை 
மெல்லச் செதுக்கு 

மரம் உறுதிதான் 
அரத்திற்கல்ல 
மறித்து நிற்பாள் 
மெல்லிய கத்தியாகு 

பாதை நீளந்தான் 
பாதத்திற்கல்ல 
நெடுங்கதை அவளை 
நிதானமாய் வாசி 

பூட்டுக்கு சாவி 
புதிருக்கு விடை 
பெண்ணுக்கு ஆண் 
அறியாயோ நீ 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community