Tuesday, October 13, 2015

பாரதம்

IndiBlogger - The Indian Blogger Community கதம்பம் நம் பாரதம் 
நீண்டதோர் பூச்சரம் 
வடக்கேயிருந்து தெற்கே 
வருவாரே யாத்திரையாக 
குமரிமுனை அடைந்து 
கும்மாளமாய் முக்கடல் 
கூடி ஆரவாரம் செய்யும் 
கோலகல காட்சியை கண்டு 
பாரத தேசம் முடியும் இடம் 
இது என்பார் தீர்மானமாய் 
இல்லை என்பார் எமதருமை 
தீந்தமிழர் திரும்பி நின்று பார் 
தேசம் துவங்குகிறதிங்கென்று 
என்னே எம் இறும்பூது இது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community