Monday, October 12, 2015

ஏன்

IndiBlogger - The Indian Blogger Community 

லேசானது மனது 
குளிந்த காலையில் 
குயிலின் கூவலிலே 
இதமான பகலிலே 
மீண்டும் தேன் காதிலே 
சிலிர்த்துப் போனேனே 
ஏழாவது மாடி சாரத்தில் 
ஏறி வேலை செய்பவன் 
பிசிரின்றி பாடினான் 
திடீரென தானாகவே 
லயித்துப்பாடிய குரலில் 
குழைவும் லயமும் 
கூடவே பாவமும் 
ஏன் பாடினான் 
அலுப்பு மறக்கவா 
அலுக்காத மறக்காத 
உறவின் நினைவிலா 
இசையின் ரசிகனாகவா 
சில வரிகள் மட்டும் 
பீரிட்டு வந்தனவோ 
பின் நின்று போனதோ 
ஏன் பாடினான் 
பேருக்கும் புகழுக்கும் 
பொருளுக்கும் இல்லை 
நிச்சயமாய் இல்லை 
மேடை முன்னமர்ந்து 
ஆரவாரமாய் ரசிக்க 
ஓர் கூட்டமுமில்லை 
தானே ரசிகன் 
தானே கலைஞன் 
கூவும் குயில் 
ஆடும் மயில் 
சரஞ்சரமாய் மழை 
நனைந்த மரங்கள் 
சிரிக்கும் பூக்கள் 
இனிக்கும் கனிகள் 
எல்லாம் ஒரு ரகம் 
அவனும் அந்த இனம் 


No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community