Monday, October 12, 2015

தீபாவளி

IndiBlogger - The Indian Blogger Community

சின்னஞ்சிறு விதையிலே 
பெரிய மரம் வளர்ந்தது 
கனியும் நிழலும் தந்தது 
கற்பகத் தருவாய் ஆனது 

குஞ்சுக் கையும் காலுமாய் 
பிஞ்சுக் குழந்தை பிறக்குது 
வலிய தோளுடன் வளர்ந்து 
வாலிபனாய் ஆகி நிற்குது 

ஆழ உழுது விதைத்த பின் 
வரப்பு கட்டி நீர் பாய்ச்சி 
களையெடுத்து உரமிட்டு 
விளைச்சல் கண்டிடலாம் 

பாலும் சோறும் ஊட்டுகையில் 
பண்பும் நெறியும் கதைகளாய் 
சொல்லி வளர்த்த நம் பாலகன் 
நாளை உலகின் நல்ல நாயகன் 

வெயில் பார்த்து நிழல் பார்த்து 
தழை ஒடித்து கிளை மடித்து 
வளர்த்த தோட்டம் சிரிக்குது 
வனப்பாய் இல்லம் துலங்குது 

அறிவை வளர்த்து ஆசை அளந்து 
சிறகை விரித்து வானில் பறந்து 
உகந்தது பகுத்து தரம் பிரித்து 
மிகுந்திடாது எல்லை வகுப்போம் 

வம்ச விருட்சங்கள் கூட்டத்திலே 
இயற்கையுடனே கை கோர்த்து 
வரலாறு வளமாய் வழி நடக்க 
இணையில்லா தீபாவளியென்றுமே 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community