Monday, October 12, 2015

உயிரெழுத்து

IndiBlogger - The Indian Blogger Community அன்பிருந்ததால் அகிலம் பிறந்தது
ஆதாம் ஏவாளை இணைத்தது
இன்பம் ஊற்றாய் பெருகியது
ஈடில்லா சொர்க்கம் தெரிந்தது
உவப்பில் காலங்கள் கடந்தது
ஊனும் உணர்வும் சிலிர்த்தது
எழிலாய் வானில் பறந்தது
ஏறுமுகமாய் பயணித்தது
ஐம்புலனும் விழித்திருந்தது
ஒளியை கண்ணில் தேக்கியது
ஓடும் ஆறாய் விரைந்தது
ஔடதம் தேடி அலைந்தது
அ·து அன்பில்தானே இருந்தது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community