Monday, October 12, 2015

கடைசியில்

IndiBlogger - The Indian Blogger Community காரிருள் வானில் 
கண்ணைச் சிமிட்டும் 
ஒற்றைத் தாரகை 
வாடைக் காற்றில் 
ஒரே தேவை 
ஒரு கை அணைக்க 

ஓடிக் களைத்து 
ஓய்ந்து நின்று 
இழுத்துவிட்ட மூச்சு 
வந்த பாதை வியந்து 
மீதிப் பயணம் மலைத்து 
திகைக்கின்ற கணத்திலே 

பல்லும் முடியும் உதிர 
பற்றும் பொறுப்பும் அகல 
அயர்வும் சோர்வும் அமர 
கனவாய்க் காலம் தோன்ற 
கனிவாய் நினைவும் மாற 
கணக்கு சரியாய் முடிய 

தனியாய் வந்து 
திருவிழாவில் வளர்ந்து 
தனியாய்ப் போக 
தாமரை இலையில் 
உருளும் நீராய் 
உள்ளம் மாறிட 

புள்ளியாய் உதித்து 
பூவாய்ப் பூத்து 
புனலாய்ப் பாய்ந்து 
பரந்தோடி ஓய்ந்து 
துளியாய்க் கரைய 
காத்திருக்கும் சங்கமம் 

தளிராய் இளசாய் 
பச்சையாய் பளபளப்பாய் 
முற்றலாய் சருகாய் 
காய்ந்திடும் இலை 
கடைசியில் தானாய் 
வலிக்காமல் உதிரும் 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community