மனிதன் வளர்ந்தான்
காடு திருத்தி
நாடு பிரித்து
மொழி பழகி
தொழில் பெருக்கி
அறிவுடன் ஆராய்ந்து
செறிவுடன் சீரமைத்து
கலைகள் வளர்த்து
கண்டங்கள் கடந்து
எல்லைகள் விரித்து
இயற்கையை அடக்கி
விலங்கினம் ஒடுக்கி
மனிதம் நிரூபித்து
சிகரங்கள் தொட்டு
மிளிர்கின்ற வேளையில்
விளைநிலத்தில் களைகள்
கண்டு களையாதிருப்பானோ
No comments:
Post a Comment