ஆனதே ஆனந்த வெள்ளம்
களிப்பில் மிதக்கும் உள்ளம்
ஆசையாய் வளர்த்த கொடி
தன்னிகரில்லா அழகுச்செடி
உச்சி மாடி வரை ஏறி நின்று
கொத்துகொத்தாய் பூத்திருக்கு
வெள்ளையும் வெளிர் சிகப்புமாய்
காகித மலரெனும் போகன்வில்லா
தோட்டத்து அரசனாம் அவன்
எக்காள சிரிப்பில் அழைப்பினில்
அக்கம்பக்கமெல்லாம் அடிமை
அழகின் ஆராதனை இதுதானோ
ஆவியை இதமாய் வருடிடுமோ
இயற்கை செய்யும் மாயந்தானோ
No comments:
Post a Comment