Wednesday, May 12, 2010

போகன்வில்லா

IndiBlogger - The Indian Blogger Community

ஆனதே ஆனந்த வெள்ளம்
களிப்பில் மிதக்கும் உள்ளம்
ஆசையாய் வளர்த்த கொடி
தன்னிகரில்லா அழகுச்செடி
உச்சி மாடி வரை ஏறி நின்று
கொத்துகொத்தாய் பூத்திருக்கு
வெள்ளையும் வெளிர் சிகப்புமாய்
காகித மலரெனும் போகன்வில்லா
தோட்டத்து அரசனாம் அவன்
எக்காள சிரிப்பில் அழைப்பினில்
அக்கம்பக்கமெல்லாம் அடிமை
அழகின் ஆராதனை இதுதானோ
ஆவியை இதமாய் வருடிடுமோ
இயற்கை செய்யும் மாயந்தானோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community