நான் என்றதும் வியந்து போகிறேன்
ஒன்றா இரண்டா என் பரிமாணங்கள்
பல கோணத்தில் பளீரிடும் மணியோ
பிறந்தது ஓர் மகளாய் பேத்தியாய்
மலர்ந்தது சகோதரியாய் தோழியாய்
மணந்தது மருமகளாய் மனைவியாய்
மற்றும் நாத்தியாய் ஓரகத்தியாய்
மகிழ்ந்தது தாயாராய் மாமியாராய்
மகுடமணிந்தது முதிய பாட்டியாய்
அவதாரம் இங்கு இத்தனை எடுத்து
அரிதாரம் சரியாய் குழைத்துப் பூசி
நாடக மேடைதனில் நடமாடும் 'நான்'
பங்குபெற்றிட எத்தனை காட்சிகள்
No comments:
Post a Comment