இதற்காகத்தானா?
ஆஹா! அருமையான பதம்!
வினாவில் வழிவது என்ன ரசம்?
பரிதாபம்? பச்சாதாபம்?
வேதனை? விரக்தி?
ஏமாற்றம்? தடுமாற்றம்?
களிப்பு? எக்களிப்பு?
காத்திருத்தலின் முடிவு?
வியப்பின் விழி விரிப்பு?
எத்தனை சாத்தியம்?
சந்தர்ப்பம் சூழல்
கலைஞன் தூரிகை
வரையப்போகும் காட்சியோ?
எல்லையுண்டோ கற்பனைக்கு?
No comments:
Post a Comment