Wednesday, May 12, 2010

வினைகள்

IndiBlogger - The Indian Blogger Community

துவங்குவதில்லை பெரிய வினைகள் பெரிய விதத்திலே
சிறு பொறியில் துவங்கும் வீட்டை காட்டை அழிக்கும் தீ
சிறு சிரிப்பில் உதித்த சினந்தானே பாரதப் போரானது
சிறு குறும்பு கூனியின் வன்மத்தால் காட்டுக்கு துரத்தியது
சிறுமைகள் வெடித்து புரட்சியில் ரத்த ஆறாய் ஓடுவதுண்டு
சிறு விதைக்குள் பெரிய விருட்சம் வளர துவங்குவதுண்டு
சிறு துளிகள் திரண்டு பெரு வெள்ளம் பெருகி வருவதுண்டு
சிற்றடியில் துவங்கி பெரும்பயணம் தொடர்வதை காணீரோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community