பயன் எண்ணாத பாவை
படைக்கின்றாள் அமுது
பரிவுடன் சமைத்து
பதமான உப்புமா
பூரியோடு குருமா
பளீரென சாதம்
பக்குவமாய் குழம்பு
பதார்த்தங்கள் பல
பச்சடியும் உண்டு
பாயசமும் செய்து
பாசமும் கலந்து
பரிமாறிய விருந்து
பசியாறிய முகத்தில்
பார்க்கின்ற திருப்தி
பரிசாகும் அவளுக்கு
புருஷனும் பிள்ளைகளும்
புசிக்கின்ற ரசனைக்கு
பெண் இருப்பாள் தவம்
No comments:
Post a Comment