ஏற்றும் எஸ்கலேட்டரைக் கண்டு
வியந்து அதன் பின்னர் மிரண்டு
பழகியதும் பயம் சிறிது குறைந்து
நாகரிக ஏணியில் நான் ஏறியது
வளரும் உலகை எட்டிப் பார்த்தது
பெருநகரில் மகன்கள் வாழ நேர்ந்து
வணிக கேளிக்கை வளாகங்களுக்கு
அன்புடன் அழைத்துச் சென்ற போது
எங்கள் சிறிய நகரமிப்போது
ஒரு பெருநகரமாய் வளருது
பளபள துணிக்கடை வரவு
அதை அறிமுகம் செய்தது
அச்சத்தை ஆர்வம் மீறியது
முதன் முதலாய் ஏறியபோது
மக்கள் முகமெல்லாம் பல்லானது
என் கதையும் நினைவில் வந்தது
No comments:
Post a Comment