கிடைக்கும் நிம்மதி
மகேசன் தரிசனத்தில்
இமயத்தின் மடியில்
கங்கையின் கரையில்
பாவத்தைக் கரைக்க
யாத்திரை செல்கிறேன்
என்றாள் இளையவள்
இன்னும் கொஞ்சம்
பாவம் செய்துவிட்டு
வருகிறேன் என்றாள்
முன்னால் பிறந்தவள்
எத்தனை கோணங்கள்
எண்ணத்தில் கோணல்கள்?
குழந்தை குணங்கள்!
No comments:
Post a Comment