Monday, July 11, 2011

போற்றி

IndiBlogger - The Indian Blogger Community
போற்றி வளர்ப்பான் நல்ல தோட்டக்காரன்
செடிகளின் தனித்தன்மை தேவை அறிந்து
நிழலா வெயிலா நீர் விட்டிடும் அளவென்ன
கவாத்து செய்யும் காலமறிந்து ஒடித்து
சீராக நேராக எழிலாக மரம் திருத்தி
தக்க பருவத்தே தீதில்லா உரமிட்டு
அயராத உழைப்பும் கவனமும் குவித்து -
குடும்பமெனும் தோட்டத்து உறவுகளை
அங்ஙனமே பராமரிக்கும் இல்லாளின்
ஞானத்திலே ஞாலம் தளைத்திருக்குமே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community