போற்றி வளர்ப்பான் நல்ல தோட்டக்காரன்
செடிகளின் தனித்தன்மை தேவை அறிந்து
நிழலா வெயிலா நீர் விட்டிடும் அளவென்ன
கவாத்து செய்யும் காலமறிந்து ஒடித்து
சீராக நேராக எழிலாக மரம் திருத்தி
தக்க பருவத்தே தீதில்லா உரமிட்டு
அயராத உழைப்பும் கவனமும் குவித்து -
குடும்பமெனும் தோட்டத்து உறவுகளை
அங்ஙனமே பராமரிக்கும் இல்லாளின்
ஞானத்திலே ஞாலம் தளைத்திருக்குமே
No comments:
Post a Comment