காந்திக்குப் பிடித்த மூன்று குரங்கு பொம்மை
என் வீட்டு கூடத்தை அலங்கரிப்பதுண்மை
காண்போர்க்கெல்லாம் நினைவூட்ட வேண்டுமது
கண்ணியமான கருத்துள்ள கட்டுப்பாடென்று
ஆயின் ஐயமொன்று எழுகின்றது மனதிலே
கண்ணில் விழுந்த சிறு தூசென உறுத்துது
கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும்
குரங்கு மூன்றும் கலங்குமோ குழம்புமோ
எப்போதும் ஊமையாய் செவிடாய் குருடாய்
இருந்திடத்தான் வேண்டுமோ கலியுகத்தில்
தீயவை என்பதன் புதுப் புது அர்த்தங்கள்
அனர்த்தங்கள் அரிதாரங்கள் புரியாமலே
No comments:
Post a Comment