Sunday, July 10, 2011

தீயவை

IndiBlogger - The Indian Blogger Community
காந்திக்குப் பிடித்த மூன்று குரங்கு பொம்மை
என் வீட்டு கூடத்தை அலங்கரிப்பதுண்மை
காண்போர்க்கெல்லாம் நினைவூட்ட வேண்டுமது
கண்ணியமான கருத்துள்ள கட்டுப்பாடென்று
ஆயின் ஐயமொன்று எழுகின்றது மனதிலே
கண்ணில் விழுந்த சிறு தூசென உறுத்துது
கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும்
குரங்கு மூன்றும் கலங்குமோ குழம்புமோ
எப்போதும் ஊமையாய் செவிடாய் குருடாய்
இருந்திடத்தான் வேண்டுமோ கலியுகத்தில்
தீயவை என்பதன் புதுப் புது அர்த்தங்கள்
அனர்த்தங்கள் அரிதாரங்கள் புரியாமலே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community