Wednesday, July 20, 2011

என் கதை

IndiBlogger - The Indian Blogger Community
ஏற்றும் எஸ்கலேட்டரைக் கண்டு
வியந்து அதன் பின்னர் மிரண்டு
பழகியதும் பயம் சிறிது குறைந்து
நாகரிக ஏணியில் நான் ஏறியது
வளரும் உலகை எட்டிப் பார்த்தது
பெருநகரில் மகன்கள் வாழ நேர்ந்து
வணிக கேளிக்கை வளாகங்களுக்கு
அன்புடன் அழைத்துச் சென்ற போது

எங்கள் சிறிய நகரமிப்போது
ஒரு பெருநகரமாய் வளருது
பளபள துணிக்கடை வரவு
அதை அறிமுகம் செய்தது
அச்சத்தை ஆர்வம் மீறியது
முதன் முதலாய் ஏறியபோது
மக்கள் முகமெல்லாம் பல்லானது
என் கதையும் நினைவில் வந்தது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community