ரசிக்கின்ற மதனராஜனே என் மடியில் தூங்கிவிடு
சிரித்தது பொல்லாத வண்டு பூவே பேராசை உனக்கு
சங்கிலியாய் தன் வளம் தொடர இயற்கை காத்திருக்கு
பூப்பூவாய் நானும் தேன் குடித்துச் செல்கின்றபோது
மகரந்தத் துகளெல்லாம் என் உடலில் ஒட்டியெடுத்து
பரிமாற்றம் செய்து பூவின் இனப்பெருக்கம் நடக்குது
சபலமில்லை என் மனதில் பொறுப்பான பணியெனது
No comments:
Post a Comment