Tuesday, March 19, 2013

இனப்பெருக்கம்

IndiBlogger - The Indian Blogger Community சுகிக்கும் வண்டிடம் வண்ணமலர் கிசிகிசுத்தது
ரசிக்கின்ற மதனராஜனே என் மடியில் தூங்கிவிடு
சிரித்தது பொல்லாத வண்டு பூவே பேராசை உனக்கு
சங்கிலியாய் தன் வளம் தொடர இயற்கை காத்திருக்கு
பூப்பூவாய் நானும் தேன் குடித்துச் செல்கின்றபோது
மகரந்தத் துகளெல்லாம் என் உடலில் ஒட்டியெடுத்து
பரிமாற்றம் செய்து பூவின் இனப்பெருக்கம் நடக்குது
சபலமில்லை என் மனதில் பொறுப்பான பணியெனது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community