தன்னிடம் நலன்களை வாங்கிட
பெரிய கூடையுடன் வருபவளுக்கு
நிறைத்து அனுப்புமாம் அத்தெய்வம்
மற்றவள் கொண்டு வந்த சின்னக் கூடையை
வயக்காட்டு உரமாய் பாட்டியின் போதனைகள்
வசவோடும் பழமொழியோடும் கேட்டவள்
வளர்ந்தேன் நேராய் வாழ்கிறேன் நலமாய்
ஒழித்தேன் பேராசை பெற்றேன் அடக்கம்
திருப்தியின் அருமை அறிவீர் அனைவரும்
No comments:
Post a Comment