பாடம் படிக்கும் மாணவியாய்
பாச மகள் பகிர்ந்து கொண்டாள்
பரவசமான முதல் பனி மழையை
பூப் போல் கையில் விழும் வடிவம்
பொலிவாய் செதுக்கிய நட்சத்திரம்
பொசுக்கென கரைந்துவிடும் மாயம்
பொம்மை மனிதன் செய்யும் கூட்டம்
பாகுபாடின்றி பெரியவரும் சிறாரும்
பளிங்கு போல் எங்கும் ஒரு நிர்மலம்
பரிசுத்தமான நிகழ்வதுவோர் அதிசயம்
பன்முக இயற்கையின் தூய தரிசனம்
பரவிக்கிடந்தது அங்கே ஒரு பயபக்தி
No comments:
Post a Comment