எங்கே உளது உணவென்று
உயிரினங்கள் முகர்ந்துவிடும்
வண்டறியும் தேன் இருக்கும்
மலர்களின் இருப்பிடம்
வீசும் நறுமணத்திலே
இரவு மலர்களின் வெண்மை
எளிதாய் கண்டுபிடிக்கவே
தேனை கொடுப்பதின் விளைவு
மகரந்த சேர்க்கையல்லவோ
தானும் பிழைத்துப் பெருகி
தன் சங்கிலி கண்ணிகளும்
வலுவாய் நலமாய் தொடர
அமைந்த அழகிய ஒழுங்கை
குலைக்கிறான் பாவி மனிதன்
No comments:
Post a Comment