Saturday, January 7, 2012

பாவி மனிதன்

IndiBlogger - The Indian Blogger Community
எங்கே உளது உணவென்று
உயிரினங்கள் முகர்ந்துவிடும்
வண்டறியும் தேன் இருக்கும்
மலர்களின் இருப்பிடம்
வீசும் நறுமணத்திலே
இரவு மலர்களின் வெண்மை
எளிதாய் கண்டுபிடிக்கவே
தேனை கொடுப்பதின் விளைவு
மகரந்த சேர்க்கையல்லவோ
தானும் பிழைத்துப் பெருகி
தன் சங்கிலி கண்ணிகளும்
வலுவாய் நலமாய் தொடர
அமைந்த அழகிய ஒழுங்கை
குலைக்கிறான் பாவி மனிதன்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community