நான் தான் முட்டாளோ
முதல் ஆளாய் வந்துவிட்டு
முழிக்கிறேன் நேரம் தவறாமை
மறந்த விழாக் கூட்டத்தினர் முன்
முதல் ஆளாய் கண்டிக்கிறேன்
கண் முன்னே அக்கிரமம் நடக்கையில்
மௌனமாய் மற்றவர் பார்க்கையில்
முதல் ஆளாய் கொதிக்கிறேன்
கலாசாரம் காற்றில் பறக்கையில்
கைதட்டி பிறர் அதை ரசிக்கையில்
கேவலமில்லை இந்த மௌடீகம்
நான் இருப்பேன் நானாகத்தான்
No comments:
Post a Comment