புண்ணியம்தன்னைத் தேடித் தேடி
கோவில் கோவிலாய் சென்று
குளங்களில் தவறாது புனித நீராடி
திருவோடுகளில் சில்லறை வீசி
உண்டியலில் காணிக்கை செலுத்தி
பக்திப்பழமாய் பரவச கோலம்
நெஞ்சில் ஈரம் இன்றி அதிகாரம்
பொருளுக்கும் புகழுக்கும் பேராசை
பெருக்கியது பணமா புண்ணியமா
காலமறிந்து செய்யும் உதவி
ஓசையின்றி வழங்கிய நிதி
கல்விக்கண் திறக்க விரும்பி
பச்சை வளம் பூமியில் காத்து
தீய சிந்தனை செயல் ஒழித்து
தேடிய புண்ணியம் திரவியம்
தலைமுறைகள் அதில் வாழும்
No comments:
Post a Comment