தேவதைகள் பெரியவர்க்கு பரிச்சயமில்லை
சிறுமிகளுக்கோ நெருங்கிய தோழிகளன்றோ
மாற்றாந்தாயும் அவள் மகள்களும் தடுக்க
அதைத்தாண்டி மன்னர் அளித்த விருந்துக்கு
எலிகள் பரிகளாகி பூசணி சாரட்டை இழுக்க
அழகிய பதுமையாய் அதிலமர்ந்து சென்று
சின்டிரல்லா இளவரசன் மனம் கவர்ந்தாடி
கண்ணாடி செருப்பின் துப்பிலே இறுதியில்
மணம் முடித்து அரண்மனை புகுந்த கதை
அறியாத சின்னச் செல்லங்கள் உண்டோ
No comments:
Post a Comment