மனிதம் என்றும் புதிர்தானோ
மாட மாளிகை பிடிக்காதோ
மண் குடிசையில் தழைக்குமோ
கணக்குப் போட தெரியாதோ
அடித்த கையை வருடுமோ
அழுத கண்ணை துடைக்குமோ
உடுக்கை இழந்தவன் கை போலே
ஒடி வந்து உதவுமோ உருகுமோ
பலனை எண்ணாத பரோபகாரமோ
என்றும் ஒரு கண்ணோடு சேர்ந்தழும்
மறு கண்ணின் இயல்பின் குணமோ
வற்றாத உயிர்மையின் ஊற்றோ
No comments:
Post a Comment