தமிழ் அறிவாள் பல நாகரிகம்
அவள் அலங்காரம் பலவிதம்
காலத்திற்கேற்ப மாறும் கோலம்
பல்லை உடைக்கும் இலக்கண நடை
பாகாய் இனிக்கும் மணிப்பிரவாளம்
வட்டார மொழியென அங்கங்கே தளுக்கி
ஊடக வழி வித விதமாய் மினுக்கி
விடலைகள் உதடுகளில் தத்தளித்து
இன்று ஆங்கிலக் கடலில் மூழ்கினாள்
முத்துக்குளிக்கவோ மரணிக்கவோ
No comments:
Post a Comment