காலம் கலிகாலம் ஆனதே
எழுதியவன் ஏட்டை கெடுக்க
பாடியவன் பாட்டை கெடுக்க
உலகத்தை கொலைவெறி பிடிக்க
எதுவுமே இங்கு புரியவில்லை
அனர்த்தம் தலைவிரித்தாட
அநாகரிகம் அதை ரசித்திட
புதிது புதிதாய் பிறக்கும்
அபத்தங்கள் பெருக பிறக்கும்
புது வருடம் புது வெள்ளத்தில்
புரட்டியடிக்குமோ புனரமைக்குமோ
இளைய தலைமுறையினரை
மாறுமோ மந்தை சிந்தனை
உடையுமோ வெத்துக் குமிழிகள்
No comments:
Post a Comment