Saturday, December 31, 2011

தமிழ்

IndiBlogger - The Indian Blogger Community
தமிழ் அறிவாள் பல நாகரிகம்
அவள் அலங்காரம் பலவிதம்
காலத்திற்கேற்ப மாறும் கோலம்
பல்லை உடைக்கும் இலக்கண நடை
பாகாய் இனிக்கும் மணிப்பிரவாளம்
வட்டார மொழியென அங்கங்கே தளுக்கி
ஊடக வழி வித விதமாய் மினுக்கி
விடலைகள் உதடுகளில் தத்தளித்து
இன்று ஆங்கிலக் கடலில் மூழ்கினாள்
முத்துக்குளிக்கவோ மரணிக்கவோ

சிறு பிள்ளை

IndiBlogger - The Indian Blogger Community
சூரியன் சுட்டெரித்தால் பிடிக்கவில்லை
சூரியன் விடுப்பில் சென்றால் பிடிக்கவில்லை
மழையும் பனியும் காற்றும் பிடிக்கவில்லை
எதுதான் பிடிக்கும் என்றும் தெரியவில்லை
சிறு பிள்ளை மனக்குறைக்கு ஏது எல்லை
வருடங்கள் பறந்தாலும் மாறாதோ இந்நிலை

Thursday, December 29, 2011

கலிகாலம்

IndiBlogger - The Indian Blogger Community
காலம் கலிகாலம் ஆனதே
எழுதியவன் ஏட்டை கெடுக்க
பாடியவன் பாட்டை கெடுக்க
உலகத்தை கொலைவெறி பிடிக்க
எதுவுமே இங்கு புரியவில்லை
அனர்த்தம் தலைவிரித்தாட
அநாகரிகம் அதை ரசித்திட
புதிது புதிதாய் பிறக்கும்
அபத்தங்கள் பெருக பிறக்கும்
புது வருடம் புது வெள்ளத்தில்
புரட்டியடிக்குமோ புனரமைக்குமோ
இளைய தலைமுறையினரை
மாறுமோ மந்தை சிந்தனை
உடையுமோ வெத்துக் குமிழிகள்

அழுகை

IndiBlogger - The Indian Blogger Community
அழுகை அவசியமான செயலே
அந்தரங்கம்தான் அதன் அழகே
அழுத்தம் நீக்கி அழுக்கை கழுவி
அமைதியை தரும் வைத்தியமே
அவையில் அழும் பலர் பொய்யர்கள்
அதில் முதலை கண்ணீர் ஒரு ரகம்
அமங்கல வீட்டிலோர் சம்பிரதாயம்
அங்கே அவலமாகும் ஒரு புனிதம்

Wednesday, December 28, 2011

நிகர லாபம்

IndiBlogger - The Indian Blogger Community
அட்டவணைப்படி உண்டு உறங்கி
அளவாய் எதையும் அனுபவித்து
ஆரோக்கியத்தை கணக்காய் பேணி
ஆயுளை நீட்டித்து அறிவோடியங்கி
அடைந்த நிகர லாபம்தான் என்ன
அமைதியா ஆனந்தமா ஆயாசமா

மனம்

IndiBlogger - The Indian Blogger Community
மனம் இருக்கவேண்டும் ஒரு பூந்தொட்டியாய்
ஆனால் குரங்கது ஆகுது குப்பைத்தொட்டியாய்
ஓயாமல் அலையடிக்கும் ஆசாபாசங்கள்
ஒப்புக்கொள்ள மறுக்கும் நியாய தர்மங்கள்
இப்புயலில் சிக்கிய சிறு பாய்மரக்கப்பலதை
உல்லாச ஊஞ்சலாய் ஆடவைக்க கற்பதெப்படி

Tuesday, December 27, 2011

அந்த பகவதி

IndiBlogger - The Indian Blogger Community
நாயரை அறியாத நாடுண்டோ
நாவிற்கு சுவையான தேனீரும்
நல்ல மசால் வடையும் விற்கும்
நாட்டுநடப்பை அலசும் இடமாய்
நன்குணர்ந்து மகிழாத பேருண்டோ
நட்பும் நேசமும் நெருக்கமும் இன்று
நசிந்தது ஏனென்று ஞான் அறியேன்
நல்வாக்கு பறையணும் அந்த பகவதி
IndiBlogger - The Indian Blogger Community