Thursday, February 19, 2015

அமரத்துவம்

IndiBlogger - The Indian Blogger Community அமிர்தம் கடைந்தெடுக்க
அசுரர் உதவிடவேண்டும்
அதில் பங்கு மட்டுமில்லை
அநீதியின் அமரத்துவம்

எங்கே

IndiBlogger - The Indian Blogger Community சத்தியம் போற்றும் அரிச்சந்திரன்
பிறன் மனை நோக்கா சீதாராமன்
கொடுத்து கை சிவந்த கர்ணன்
பிரம்மச்சர்யம் தழுவிய பீஷ்மன்
தேடுகிறேன் எங்கே அம்மானுடன்
இருக்கிறானா அது போல் ஒருவன்

தகவல்

IndiBlogger - The Indian Blogger Community பாட்டெழுத அன்று பனை ஓலை
பரிசளித்து குளிர்ந்தது மன்னர் குலம்
பின்னாளில் காகித உபயோகம்
படித்திட பாதுகாக்க குதூகலம்
தட்டித் தடவி இன்று தகவல் பிறக்கும்
எட்டாத விண்ணிலுலகம் பறக்கும்

பாழும் கிணறு

IndiBlogger - The Indian Blogger Community தன்னால் எடுத்த முடிவுதான் என்றாலும்
தனக்காக பெற்றோர் தேர்ந்தெடுத்தாலும்
திருமணம் என்னும் பந்தம் பாழும் கிணறு
எங்கும் உலா வருதிந்த அரியதோர் கூற்று

அம்மம்மா

IndiBlogger - The Indian Blogger Community வலிக்கலாச்சே கையும் காலும்
கண்ணிப்போச்சே கன்னமிரண்டும்
விட்டுப்போச்சே குறுக்கெலும்பும்
சிவந்துபோச்சே தூங்காத கண்ணும்
அம்மம்மா அன்றவன் காதல் மோகம்
இன்றோ அவனிடம் மிருக மூர்க்கம்

சுவை

IndiBlogger - The Indian Blogger Community வாழ்வில் சுவை கூட்டுவதெது
உப்பும் உரைப்புமாவது யாது
சப்பென்றில்லாமல் செய்வதெது
அடுத்து நடக்கப்போவதென்ன
என்பதின் மர்மமே அதிசயமே
நல்லதோ கெட்டதோ வரட்டுமே 
அறியாமல் இருப்பது ஆனந்தம்
அறிந்தால் போய்விடும் நிம்மதி

Monday, February 9, 2015

ஆசைப்பட்டேன்

IndiBlogger - The Indian Blogger Community இத்திறமைக்கே ஆசைப்பட்டேன்
கை வரத்தான் அது மறுக்கிறதே
செடியில்லை நீர் விட்டு வளர்க்க
ஆடில்லை இலை தழை கொடுக்க
எப்படித்தான் நான் வளர்ப்பேன்
வக்கணையாய் கவிதை வடிப்பேன்
IndiBlogger - The Indian Blogger Community