பொழுது போவதைத் தவிர
பலன் இன்னும் பல இருக்கு
பச்சைப் புல்லில் சிறிது நேரம்
பூனைத் தூக்கம் போட்டபின்பு
பாதம் புதைய மணலில் நடந்து
பல கணம் கடல் நீரில் நின்று
பரவசமாய் மாலையில் மயங்கி
பஞ்சாய் மனம் லேசாகி பறக்க
பகையும் புகைச்சலும் மறைய
பட்டாணி சுண்டல் வேர்க்கடலை
பஜ்ஜி பொரித்த சோளமும் தின்று
புத்துணர்வோடு எழுந்து நடந்து
புலரும் புதுக் காலையின் சவால்களின்
பயம் தொலைத்து கூட்டை அடையலாம்
No comments:
Post a Comment