Thursday, January 8, 2015

விதியே

IndiBlogger - The Indian Blogger Community நெஞ்சில் கபம்
கொடியதோர் சாபம்
உலுக்கும் இருமல்
நாட்டு காட்டு மருந்து
அனைத்தும் முயன்றும்
இல்லையோர் பலன்
சாவின் விளிம்பில்
ஊசலாடும் உயிர்
கொல்லாமல் கொல்லும்
கொடியதோர் வதை
உச்சி வான் ஓசோன் 
உடம்புக்கு நல்லதாம்
தரையில் உலாவுவது
இப்படி வாட்டுமாம்
பனி வாடை காத்து
பக்குவமாய் இருந்து
தப்ப முடியவில்லை
மூப்புடன் கைகோர்த்து
மார்கழி இளிக்கிறது
மூச்சிரைத்தே சாவதல்ல 
என் இறப்பின் கனவு
மதியை வெல்லும் விதியே
ஏன் என்னை சோதிக்கிறாய்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community