Tuesday, May 1, 2012

பேரின்பம்

பாட்டீஈஈ..


செல்லப்பேத்தியின் அபயக்குரல்

ஈரக்குலை பதறியது

என்னாச்சோ ஏதாச்சோ

சின்டிரல்லாவை சித்தெறும்பு கடிச்சதோ

அரோராவுக்கு ஆராரோ பாடணுமோ

பார்பி கண்ணாடியை தொலைத்துவிட்டாளோ

பெல்லாவுக்கு பேரிக்காய் வேண்டுமோ

கூப்பிட்ட குரலுக்கு போட்டது போட்டபடி

ஓடி வந்து நிற்பது பேரின்பம்IndiBlogger - The Indian Blogger Community

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community