Friday, September 16, 2016

விசாரம்

IndiBlogger - The Indian Blogger Community
தருமே தைரியம் உச்சகட்ட சோதனை
தாளாதினி என்ற உள்ளத்து வேதனை
தீர்த்திட துடித்தாள் தொடரும் கொடுமை
தயங்காது கொட்டினாள் தன் மனச்சுமை
உளதோ துளி அன்பு உன் உள்ளத்தில்
உக்கிர வேடம் பூண்டாள் மனையாள்
உன் அடிமையாய் வாழ்ந்தது போதும்
உன் சகவாசம் எனக்கினி வேண்டாம்
சிறையை விட்டு வெளியேறுவேன்
சிறகை விரித்து சுதந்திரமாய் பறப்பேன்
சிறுமை கண்டின்று பொங்கிவிட்டேன்
சிற்றேவல்கள் இனி என்னிடம் செல்லாது
எங்கு போகிறேன் என்ன செய்கிறேன்
என்றினி என்னை நீ கண்காணிக்க இயலாது
அங்கே போகாதே இங்கே நிற்காதே அம்மம்மா
அநியாய அடக்குமுறை ஆணாதிக்கமம்மா
பொங்கியவளை பொரிந்து தள்ளியவளை
பொறுமையிழந்தவள் புருஷன் தடுத்தான்
பரிதாபமாய் தன்னிலைதனை விளக்கினான்
புரியாதவளைப் பார்த்து உரைத்தான் இப்படி
வெறியுடன் அலையுதிந்த மனிதர் கூட்டம்
வேரோடு நம்மை வெட்டி சாய்க்க துடிக்குது
விதம் விதமாய் நம்மை சுற்றி வளைக்குது
விஷப்புகைகளை நிதம் நம்மேல் வீசுது
மின்சார மின்னணு கொடூர கருவிகள்
மொத்தி சாத்தும் கொலை மட்டைகள்
மெத்த ஆபத்து ஸ்தலங்களையுனக்கு
மொத்தமாய் தடை செய்து வைத்தேனடி
விவரமாய் விளக்கவில்லை பாவி நான்
வில்லங்கமாய் போனதடி என் விசாரம்

விவகாரமேனடி எனை விட்டு செல்லாதே
விளங்கிக்கொண்டவள் விரும்பினாள் பதியை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community