Thursday, October 24, 2013

சந்தோசம்

IndiBlogger - The Indian Blogger Community ஐயா புது யுகமிதில்
படித்தவன் பாமரன்
யார் அறிவாளியென
அறிந்தேன் கதையிதில்
குறுக்கு சந்தொன்றில்
ஒருநாள் ஷோக்கான
குட்டிப்பூனையொன்று
தன வாலை உயர்த்தி
சுற்றி சுழன்று நெடுநேரம்
ஆடக் கண்டது ஓர்
பெரிய பூனையுந்தான்
என்ன செய்கிறாய் என்றது
மிடுக்குடன் குட்டிப்பூனை
பெரிய படிப்பு படித்தேன்
வாலில் உள்ளது சந்தோசம்
என்றே கற்றதையொட்டி
பிடிக்க முயல்கிறேன் அதை
என்றவுடன் சொன்னது 
பெரிய பூனை எளிமையாய்
நான் பெரிய படிப்பேதும்
படித்தேனில்லை ஆயினும்
அறிவேன் சந்தோசம் என்
வாலில் உள்ளதென என்
வேலைகளை நான்பாட்டுக்கு
செய்து வர வால்பாட்டுக்கு
என் பின் வருகிறதாக்கும்
அதனுடன் சந்தோசமும்
சாதாரணமாய் சொல்லிவிட்டு
கிளம்பியது சோலியைப் பார்க்க

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community