Sunday, August 18, 2013

சரித்திரம்

IndiBlogger - The Indian Blogger Community புரியாமலேயே சொல்வதை எழுதக்கூடாது
வியாசர் விநாயகருக்கிட்ட பதிலாணை
இடைவிடாமல் கதையைச் சொல்லச் சொன்ன
மூத்தவனின் உத்தரவிற்கு மறுமொழி
நிதானமாய் கதை தொடர கண்ட வழி
நின்று கிரகித்து பதித்தான் ஆனைமுகன்
ஆயிரமாயிரம் ஆண்டு வாழ்ந்தவரும்
அசுரரும் அந்தணரும் அரசரும் ஆரணங்குகளும்
அவர்தம் அளவில்லா ஆசாபாசங்களும் 
யயாதிக்கு யௌவனம் ஈன்று மூப்படைந்த
ஐந்தாம் மகன் பாசமும் பெற்ற பரிசும்
வரிசையாய் தொடரும் மகாகாவியமும்
மனிதன் மாறாது சரித்திரம் மாறாது
தொடரக்காண்பது மாயையா உண்மையா

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community