வியாசர் விநாயகருக்கிட்ட பதிலாணை
இடைவிடாமல் கதையைச் சொல்லச் சொன்ன
மூத்தவனின் உத்தரவிற்கு மறுமொழி
நிதானமாய் கதை தொடர கண்ட வழி
நின்று கிரகித்து பதித்தான் ஆனைமுகன்
ஆயிரமாயிரம் ஆண்டு வாழ்ந்தவரும்
அசுரரும் அந்தணரும் அரசரும் ஆரணங்குகளும்
அவர்தம் அளவில்லா ஆசாபாசங்களும்
யயாதிக்கு யௌவனம் ஈன்று மூப்படைந்த
ஐந்தாம் மகன் பாசமும் பெற்ற பரிசும்
வரிசையாய் தொடரும் மகாகாவியமும்
மனிதன் மாறாது சரித்திரம் மாறாது
தொடரக்காண்பது மாயையா உண்மையா
No comments:
Post a Comment