ஒரு காக்காயை சுட்டபின்
சிறுவர் புதிர் இதுதானே
நிமிர்ந்து நேராய் நடந்தவர்
பட்ட துயர் பேசுகின்றன
காவியமும் சரித்திரமும்
மெத்த உணர்ந்தவர் நோகாமல்
நாசுக்காய் நயமாய் வளைந்திட
பறந்துவிட்ட காக்காயாயிருக்க
நெஞ்சை நிமிர்த்தும் தீரர்களோ
பிறப்பதும் சிறப்பதும் இன்றும்
தொடர்வதே அழகிய அனுபவம்
No comments:
Post a Comment