Tuesday, July 31, 2012

சின்னஞ்சிறு குழந்தையாய்

கலங்கலாய் மாற்றும் சலனங்கள்
தெளிந்த சாரமில்லா நீரோடையை
ஆமையாய் நத்தையாய் ஊர்ந்த நாட்கள்
ரங்கராட்டினமாய் மாறிய கணங்கள்
அபூர்வமாய் வரும் இனிய  வரங்கள்
அடுக்காய் தொடர்கின்ற சம்பவங்கள்
பூப்போட்ட சராய் சட்டையில் சிப்பந்திகள்
ஆடி மகிழ்விக்க கணப்படுப்பில் முன்னால்
பலகாரம் ருசியாய் அணி வகுத்து வர
மாயக் கடற்கரை சூழலில் இனிப்புகளால்
வாயும் வயிறும் மனமும் குளிர்ந்து ததும்பிட
பல்லடுக்கு அங்காடியில் சுற்றித் திரிந்தபின்
பார்க்கும் சினிமாவும் பொழுதுதைச் சாப்பிட
எண்ணற்ற கேளிக்கைகள் குழந்தைகளுடன்
வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கிடைக்க
இரவும் பகலும் தேதியும் கிழமையும் மாதமும்
மறக்கின்றதோர் மயக்கத்தில் மிதக்கிறேன்
மீண்டும் நானொரு சின்னஞ்சிறு குழந்தையாய்IndiBlogger - The Indian Blogger Community

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community