Saturday, July 14, 2012

வரங்கள்


IndiBlogger - The Indian Blogger Community மனசு நினைத்தது எதற்கு எனக்கு இத்தனை விழிகள்


காண விரும்பாத பல கசப்பான விபரீத காட்சிகள்

உறங்காமல் களைப்பில் போராடும் பரிதாப வேளைகள்

பொல்லாத விழிகள் போல் மனசுக்கு ஏன் இத்தனை வழிகள்

செல்லாத பேர்களில்லை சத்திரம் போல் திறந்த வாசல்கள்

அனுமதிக்க தேவையில்லாத நுழைவுகள் வெளிநடப்புகள்

குதிரைக்கு கண்களில் மறைப்பு பயணத்தின் அவசியங்கள்

மாளிகைக்கு மணிக்கதவுகள் மரியாதையின் சின்னங்கள்

படைப்பில் பல சாபங்கள் முயன்றால் அவையே வரங்கள்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community