முன்னம் பார்த்த முகங்களா இவை
முதிர்ச்சியின் அடையாளம் எத்தனை
மூப்பின் தப்பாத பல அறிகுறிகள்
மூக்குக்கண்ணாடி நரைத்த தலை
மறைந்துவிட்டனவே கொடியிடைகள்
மறக்கவில்லை நளின நடை உடை
மனம் திறந்த கள்ளமில்லா கதைகள்
மடைதிறந்த வெள்ளமாய் வார்த்தைகள்
மலரும் நினைவுகளில் அருவிக்குளியல்
மாதங்கள் போலாயின வருடங்கள்
மாயையாய் திரும்பிய பள்ளிநாட்கள்
மணந்தது நாற்பத்தியெட்டாண்டாகியும்
மறுபடியும் தோழியர் சந்தித்தபோது
மீண்டுமொரு வசந்தம் அன்று பூத்தது
அழகு
ReplyDeleteThanks!
ReplyDelete