Tuesday, August 17, 2010

எழுத்தில்லா காவியம்

IndiBlogger - The Indian Blogger Community

விளக்கம் தேட அகராதி வேண்டுமோ
வார்த்தை எதுவும் உதிராமல் புரியும்
விழியின் விரிப்பும் சிகப்பும் சிரிப்பும்
வாயின் குவிப்பும் சுழிப்பும் பழிப்பும்
வெட்டும் கழுத்தின் சாடையும் அழைப்பும்
விரல்கள் பத்தின் சேட்டையும் சைகையும்
வளைந்த இடையும் புருவமும் பாதமும்
வளையாத வகிடும் நாசியும் நடையும்
வண்ண மயிலவள் ஒவ்வொரு அசைவும்
வடிப்பதெல்லாம் எழுத்தில்லா காவியம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community